சின்னசேலம்- சேலம் செல்லும் சாலையின் இருபுறமும் மழை நீர் வடிகால் வசதி இதுவரை அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதி்காரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.