சேலம் மாநகராட்சி 8-வது வார்டு காமராஜர் நகர் 2-வது தெரு, 2-வது கிராசில் சாக்கடை கால்வாயை தூர்வாராததால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், காமராஜர் நகர், சேலம்.