கடலூர் பஸ் நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.