திண்டுக்கல் நந்தவனம்பட்டி கணேஷ்நகரில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், தெருவில் தேங்குகிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே சாக்கடை கால்வாய் வசதியை விரைந்து ஏற்படுத்த வேண்டும்.