முக்கூடல் பேரூராட்சிக்குட்பட்ட சாஸ்தான் கோவில் சாலையோரம் உள்ள கழிவுநீரோடை முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் மற்றும் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாறுகாலை முழுமையாக கட்டி கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.