கால்வாய் மீது மூடி போடப்படுமா?

Update: 2026-08-02 15:13 GMT

பனமரத்துப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டில் ஈச்சமரம் பிள்ளையார் கோவிலில் இருந்து செட்டியார் தெரு வழியாக பழனி ஆண்டவர் கோவில் பிரதான சாலையில் சாக்கடை கால்வாய் அமைத்து, அப்பகுதியில் கான்கிரீட் சாலையும் கடந்த ஓராண்டுக்கு முன் புதியதாக போடப்பட்டது. அப்போது கால்வாய் மீது கான்கிரீட் சிலாப் போட்டு மூடாமல் விட்டுவிட்டனர். இதனால் கால்வாய் திறந்து கிடப்பதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கால்வாயில் தவறி விழும் அபாயமும் உள்ளது. எனவே கால்வாய் மீது கான்கிரீட் சிலாப் போட்டு மூட வேண்டும்.


மேலும் செய்திகள்