ஓசூர் மாநகராட்சி 21-வது வார்டில் உள்ள எஸ்.எம்.நகர். எக்ஸ்டென்சன் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. அதனால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. அந்த வழியாக செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். கடும் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாநகராட்சி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
-ஊர் பொதுமக்கள், ஓசூர்.