விழுப்புரம் பழனிவேல் நகரில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் சாலையில் செல்ல பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.