நோய் பரவும் அபாயம்

Update: 2025-10-26 16:59 GMT

மாரண்டஅள்ளியில் இருந்து பஞ்சப்பள்ளி செல்லும் சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக இந்த பகுதியில் சாலையோரம் குளம் போல் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி மாணவ, மாணவிகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் இந்த பகுதி வழியாக செல்லும் போது மூக்கை பிடித்து கொண்டு முகம் சுழித்தவாறு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

-தமிழ்மணி, சாமனூர்.

மேலும் செய்திகள்