கடமலைக்குண்டு நூலக தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்குகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் இருக்கிறது. எனவே சாக்கடை கால்வாயை விரைவாக தூர்வார வேண்டும்.