சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா திருவேகம்பத்து பஞ்சாயத்திற்கு உட்பட்ட உரசூர் கிராமத்தில் பாதாள சாக்கடை வசதி போதிய அளவில் இல்லை. இதனால் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.