ராதாபுரம் தாலுகா செட்டிகுளம் புதுமனையில் பிள்ளையார் கோவிலுக்கு மேற்கு புறம் உள்ள சாலையில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே கழிவுநீரை முறையாக வெளியேற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.