கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சி நாவல் நகர் 5-வது தெரு முன்பு மெயின் ரோட்டில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டு தேங்கியுள்ளது. இந்த பிளாஸ்டிக் குப்பைகள் காற்றில் பறந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் செல்கிறது. இதனால் குடியிருப்புவாசிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். ஒரு மாத காலமாக இந்த குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால், மேலும் குப்பைகள் அதிகரித்து சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தேங்கியிருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.