கூடலூர் அருகே மேல்கூடலூர் சந்தைக்கடை மாரியம்மன் கோவில் எதிரே வணிக நிறுவனங்களின் ஓரத்தில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கழிவுநீர் சாலையில் ஆறு போல் வழிந்து ஓடுகிறது. எனவே அந்த கால்வாயை முறையாக தூர்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.