ஈரோடு கருங்கல்பாளையம் கிருஷ்ணம்பாளையம் ரோட்டில் உள்ள பாதாள சாக்கடை மூடியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மூடி சாலையில் இருந்து உயர்ந்த நிலையில் உள்ளது. இதன் காரணமாக இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்துவிடுகின்றனர். ஆபத்தான பாதாள சாக்கடை மூடியை சரி செய்ய அதிகாரிகள் முன்வருவார்களா?