சென்னை கொளத்தூர் ஜெயந்தி நகர், 4-வது குறுக்கு தெருவின் சாலையில் உள்ள பாதாள சாக்கடை மூடி பழுதடைந்து ஆபத்தான முறையில் கிடந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் துறைசார்ந்த அதிகாரிகள் பழுதடைந்த பாதாள சாக்கடை மூடியை உடனடியாக மாற்றம் செய்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.