புதர் மண்டி காணப்படும் கால்வாய்

Update: 2025-09-07 18:10 GMT

ஈரோடு சாஸ்திரி நகர் அருகே குறிஞ்சி நகர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயோரம் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் அருகே உள்ள வீடுகளுக்குள் படையெடுத்து வருகின்றன. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே புதரை அகற்றி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்