நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்

Update: 2025-09-07 11:56 GMT

கரூர் மாவட்டம் நன்செய் புகழூர் ஊராட்சி தவுட்டுப்பாளையத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சிறிதான சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக சாக்கடை கால்வாய் பழுதடைந்த நிலையில் உள்ளதால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்