கோவை சிங்காநல்லூர் பஸ் நிலைய பகுதியில் சக்தி விநாயகர் கோவில் அருகே சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் மண் மற்றும் குப்பை நிறைந்து அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் வழிந்தோட முடியாமல் தேங்கி கிடக்கிறது. அதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அந்த சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.