பழனி நகராட்சி 15-வது வார்டு தெற்கு, வடக்கு பகுதியில் உள்ள தெருக்களில் பாதாள சாக்கடை, கழிவுநீர் கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் தெருவில் தேங்குகிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே பாதாள சாக்கடை, கழிவுநீர் கால்வாய் வசதியை உடனே ஏற்படுத்த வேண்டும்.