கடலூர் வேணுகோபாலபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி அருகே கழிவுநீர் வடிகால் வாய்க்கால் உடைந்து திறந்த நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள், பள்ளி செல்லும் மாணவர்கள் வாய்க்காலில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே உடைந்த வடிகால் வாய்க்காலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.