சிவகங்கை பஸ் நிலையத்தில் மழை காலங்களில் தண்ணீர் வெளியேற போதிய வடிகால் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் தண்ணீர் குளம்போல் தேங்கி காட்சியளிக்கிறது. மேலும் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் நிரம்பி கழிவுநீருடன், குப்பைகளும் பஸ் நிலையம் உள்ளே அடித்து வரப்படுகிறது. இதனால் பயணிகள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் கூடுதல் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.