மதுரை நகர் வில்லாபுரம் அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் கழிவுநீர் வாய்க்கால் நிரம்பி சில நாட்களாக சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வாய்க்காலை முறையாக தூர்வாரி கழிவுநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?