நோய்த்தொற்று பரவும் அபாயம்

Update: 2025-08-03 13:00 GMT

கரூர் மாவட்டம் புகழூரில் உள்ள மேல்நிலைப்பள்ளி அருகே குறிச்சி நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் சாலையோரம் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்