நாகர்கோவில் 5-வது வார்டு புதுக்குடியிருப்பு படிப்பகம் எதிரே ஜேம்ஸ் லேன் தெரு உள்ளது. இந்த தெருவில் ஒரு இடத்தில் குப்பைகள் அதிகமாக தேங்கி கிடக்கிறது. முறையாக அகற்றப்படாததால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. மேலும், விஷப்பூச்சிகள் மற்றும் பாம்புகளின் வசிப்பிடமாகவும் மாறி வருகிறது. இதனால், பள்ளி சென்று வரும் மாணவர்கள், தெரு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மக்கள் நலன்கருதி அப்பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.