பழனியை அடுத்த மானூர் தெற்கு தெருவில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையில் தேங்குகிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே சாக்கடை கால்வாய் வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.