பர்கூர் அடுத்த மல்லப்பாடி, பர்கூர்-திருப்பத்தூர் ரோட்டில் உள்ளது. மல்லப்பாடி ஓம்சக்தி கோவில் எதிரில் 50-க்கும் ேமற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் சாலையோரம் கோவில் பின்புறம் குளம்போல் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி சுகாதார சீர்கேட்டால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்த சாலையில் செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. எனவே அங்கு நோய்கள் பரவும் முன்பு குளம்போல் தேங்கி இருக்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
-மணி, பர்கூர்.