செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பிரியா நகர் பகுதியில் ரேசன் கடை ஒன்று உள்ளது. இந்த ரேஷன் கடை அருகில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் பல நாட்களாக திறந்த நிலையில் கிடக்கிறது. எனவே, ரேஷன் கடை வரும் வயதானோர், சிறுவர்கள் அச்சத்துடனே வந்து செல்கின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.