கழிவுநீர் கால்வாய் மூடி சேதம்

Update: 2025-06-29 12:32 GMT

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையம் செல்லும் ஜே.என். சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடிகள் சேதமடைந்து மேல்புறம் திறந்து ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் செல்லும்நிலை உள்ளது. மேலும், வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் சாலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.




மேலும் செய்திகள்