சாலையில் கழிவுநீர்

Update: 2025-06-29 12:27 GMT

சென்னை திருவான்மியூர், லட்சுமிபுரத்தில் உள்ள என்.எஸ்.கே தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் நிரம்பி கழிவுநீர் சாலையில் ஆறுபோல ஓடுகிறது. இதனால் மிகவும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் உள்ள சாக்கடை நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.






மேலும் செய்திகள்