பொதுமக்கள் அவதி

Update: 2025-06-29 12:22 GMT

சென்னை அம்பத்தூர், கள்ளிகுப்பம் செந்தில் முருகன் நகர் 1,2,3 ஆகிய தெருக்களில் கழிவுநீர் கால்வாய் பணிகள் நடந்து வந்தது. தற்போது, நெடுஞ்சாலைத்துறை பல்வேறு காரணங்களை கூறி இந்த பணிகளை கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் பாதாள சாக்கடை பணி முடியுமா,முடியாதா? என்ற எண்ணம் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. தற்போது பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் தினமும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.




மேலும் செய்திகள்