திருச்சி மாவட்டம் முசிறி வட்டம், தாத்தையங்கார்பேட்டை அருகே உள்ள பிள்ளாப்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவர்களுக்கு போதுமான கழிவறை வசதி இல்லை. இதனால் மாணவ- மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பள்ளிக்கு முறையாக கழிவறை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.