சுகாதார சீர்கேடு

Update: 2025-06-29 06:52 GMT

கொட்டாரம்-அகஸ்தீஸ்வரம் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் கொட்டாரம் ஊரில் உள்ள கழிவுநீர் வடுகன்பற்று கூண்டு பாலத்தில் வடக்கு புறமாக ஓடையில் அடைப்பு காரணமாக வெளியேறி இருந்து சாலை ஓரமாக பாய்கிறது. மழை நேரங்களில் இந்த கழிவுநீர் வடிந்தோடி கூண்டு பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது. எனவே, அதிகாரிகள் சம்பந்தபட்ட அதிகாரிகள் ஓடையை தூர்வாரி கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்