தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2026-05-31 10:45 GMT

திருச்சி மாவட்டம் வார்டு எண் 39-க்கு உட்பட்ட விண்நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் சரிவர முடியாத நிலையில் அதில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கியது. இதனால் தற்காலிகமாக பாசன வாய்க்கால் வழியாக கழிவுநீர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. தற்போது அதிலும் அடைப்பு ஏற்பட்டு, மிண்நகர் குடியிருப்பு பகுதி முழுவதும் சாக்கடை கழிவுநீர் சூழ்ந்துள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்