தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி பஞ்சாயத்து இளங்கோ நகர் சாக்கடை கால்வாய்களில் நீண்ட நாட்களாக அடைப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும்.