நாமக்கல் நடராஜபுரம் 15-வது வார்டு 4-வது தெரு ரெயில்வே ரோடு பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லை. இதனால் குடியிருக்கும் பகுதியில் கழிவுநீர் தேங்குவதால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாவதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் சாலை வசதியும் இல்லை. மழைக்காலங்களில் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து கடந்த 10 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட துறையிடம் மனு கொடுத்தும் இதுநாள்வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு எப்போதுதான் தீர்வு கிடைக்குமோ? என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.