சூளகிரியில் வாணியர் தெரு, கீழ்த்தெரு மற்றும் தீர்த்தம் சாலை ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சூளகிரி-பேரிகை சாலையில் உள்ள முனீஸ்வரர் கோவில் எதிரே தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்வோர் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டும், நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போர்க்கால அடிப்படையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ராஜா, சூளகிரி.