சென்னை நந்தனம் 3-வது குறுக்குதெருவில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.