சென்னை வடபழனி, சோமசுந்தர பாரதி நகர் 2-வது தெருவில் கடந்த 3 மாத காலமாக கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பலர் நோய் பாதிப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கழிவுநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.