செங்கல்பட்டு மாவட்டம், சிட்லப்பாக்கம் மருதுபாண்டியர் தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால், கழிவுநீர் சாலையில் தேங்கி கிடக்கிறது. சிறிது மழை பெய்தால் மழைநீருடன் கழிவுநீர் சோ்ந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.