பாளையங்கோட்டை அன்புநகர் அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு விரிவாக்கம் பகுதியில் கழிவுநீர் பாதாள சாக்கடையில் இணைக்கப்பட்டு உள்ளது. இங்கு பாதாள சாக்கடை மெயின் லைனில் அடைப்பு ஏற்பட்டதால் அரசு அலுவலர் குடியிருப்பு பகுதியில் கழிவுநீ்ர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.