கோவை நீலிக்கோணாம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் சாக்கடை கால்வாய் உள்ளது. இங்கு கடந்த 3 மாதங்களாக அடைப்பு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் புதர் செடிகளும் வளர்ந்துள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அந்த கால்வாயை தூர்வார இனிமேலாவது அதிகாரிகள் முன்வர வேண்டும்.