விருதுநகர் மாவட்டம் திருச்சுழி குண்டாற்றில் குப்பைகள் அதிகளவு கொட்டப்படுவதோடு கழிவுநீரும் கலக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரமற்ற நிலை நிலவுகிறது. எனவே ஆற்றில் குப்பைகள் கொட்டப்படுவதையும், கழிவுநீர் கலப்பதையும் தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.