செங்கல்பட்டு மாவட்டம், சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள ஒட்டியம்பாக்கம் - சி.பி.ஓ.ஏ. காலனி இணைப்பு சாலையில் கழிவுநீர் கால்வாய் மூடி சேதமடைந்துள்ளது. இந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் குழந்தைகள் மற்றும் முதியோர் மிகுந்த பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.