செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பல்லவன் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். சிலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.