கடலூர் திருப்பாதிரிப்புலியூர்- நத்தவெளி இணைப்பு சாலையில் உள்ள பாதாள சாக்கடை மூடி உடைந்துள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து பாதாள சாக்கடை மூடியை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.