பழனி அருகே மானூர் பள்ளிவாசலின் தென்புறம் உள்ள சாக்கடை கால்வாயில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் செல்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.