மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ரெயில் நிலையத்தில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கழிவறைகள் தற்போது வரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனால் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகளின் நலன் கருதி விரைந்து கழிவறைகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.