சென்னை அடையாறு, சாஸ்திரி நகர் போஸ்ட் ஆபீஸ் அருகில் ஒரு கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் இருந்து கடந்த ஒரு மாதங்களாக கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் பயங்கர தூர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும், கொசு தொல்லை அதிகம் உள்ளது. எனவே, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரி கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும்.