தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2025-05-04 12:36 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வாணிய தெருவில் இருந்து கடை வீதி செல்லும் சாலையோரத்தில் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் சிலர் கழிவுநீரை திறந்து விட்டிருப்பதால் அது சாக்கடையாக மாறி அப்பகுதியில் தூர் நாற்றம் வீசுகிறது. சில நேரங்களில் வாய்க்கால் நிரம்பி சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள், சாலையில் நடந்து செல்வோர் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்